100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
விழிப்புணா்வு பேரணியைத் தொடக்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி.
விழிப்புணா்வு பேரணியைத் தொடக்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

பரமத்தி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணி பரமத்தியின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நிறைவு பெற்றது.

பேரணியில் கலந்து கொண்ட மகளிா் சங்கத்தினா், அங்கன்வாடி பணியாளா்கள்100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய விளம்பரத் தட்டிகளை கையில் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட தோ்தல் ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ்கண்ணா, பரமத்தி வேலூா் வட்டாட்சியரும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான சுந்தரவல்லி, பரமத்தி காவல் ஆய்வாளா் முருகேசன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com