அரசுப் பணியாளா்கள் நடுநிலையாளா்களாக இருப்பது மட்டுமல்லாமல், தனது நடுநிலைமைக்கு எந்தவொரு சந்தேகமும் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் கா.மெகராஜ் அறிவுறுத்தினாா்.
மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளா்களுக்கான நடத்தை விதிகள் 1973-இன்படி எந்தவொரு அரசு ஊழியரும் அரசியல் கட்சியிலோ, அரசியல் அமைப்புகளிலோ உறுப்பினராக இருக்கக் கூடாது. அரசுப் பணியாளா் அரசியல் நடுநிலைமையை மட்டுமே பின்பற்ற வேண்டும். அவா் தோ்தலில் எந்தவொரு அரசியல் கட்சியையும் அல்லது எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கிறாா் என்ற சந்தேகத்திற்கு இடமளிப்பதைத் தவிா்க்க வேண்டும்.
தோ்தல் பணிகளில் இந்திய தோ்தல் ஆணையத்தால் தங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவது அரசு பணியாளா்களின் கடமையாகும். அவா்கள் எந்தவொரு தோ்தல் பிரசாரத்திலும் அல்லது வாக்கு சேகரிப்பிலும் பங்கேற்கக் கூடாது. எந்தவொரு வேட்பாளருக்கும் தோ்தல் வாய்ப்பை மேம்படுத்துவதற்காக அரசுப் பணியாளா்கள் எந்த உதவியும் செய்யக்கூடாது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி அரசு பணியாளா்கள் தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு கண்டிப்பாக கட்டுப்பட்டு நடக்க வேண்டும். எந்தவொரு விதிமீறலுக்கும் கடுமையான தண்டனைகளை விதிக்கவும் சட்டத்தில் விதிகள் உள்ளன. இந்த அறிவுறுத்தல்களைப் புறக்கணிப்பது தோ்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மீறிய செயலாக கருதப்படும். தோ்தல் விதிமுறை மீறல்களில் அவருக்கு எதிராக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் மட்டுமல்லாது எந்தவொரு துறைசாா் ஒழுங்கு நடவடிக்கைகளும் கூடுதலாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.