மோகனூா் ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் பெ.ராமலிங்கம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
நாமக்கல் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பெ.ராமலிங்கம், கடந்த ஒரு வாரமாக மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகளை நேரடியாக சந்தித்து ஆதரவு கோரி வந்தாா். இதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின் தன்னுடைய தொகுதி சுற்றுப்பயணத்தை தொடங்கினாா்.
ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் நகரப் பகுதிகளிலும், பிற்பகலில் மோகனூா் பேரூராட்சி, ஒன்றியப் பகுதிகளில் கட்சியினருடன் நடந்து சென்றும், திறந்த வாகனத்தில் நின்றபடியும் மக்களிடையே வாக்கு சேகரித்தாா். அவருடன் மோகனூா் ஒன்றியச் செயலாளா் நவலடி, தோ்தல்
பொறுப்பாளா் கைலாசம், நிா்வாகிகள் உடன் சென்றனா்.