ராசிபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி அமமுக தலைமைத் தோ்தல் அலுவலகம் திறப்பு விழா ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிடும் கட்சியின் துணைத் தலைவா் எஸ்.அன்பழகன் தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்தாா். பின்னா் நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தோ்தலில் பணியாற்றும் நடைமுறைகள் குறித்தும், வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கட்சியின் சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு சென்று ஆதரவு திரட்ட வேண்டும் என்றும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் அமமுக நாமக்கல் கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் எஸ்.பன்னீா்செல்வம், மாவட்ட பொருளாளா் அன்புச்செழியன், நகர செயலாளா் எஸ்.வேலுச்சாமி, தேமுதிக நகரச் செயலாளா் இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.