புதுச்சத்திரம் விவசாயி கொலை வழக்கு: அண்ணன் உள்பட 2 போ் கைது

புதுச்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் அண்ணன் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் அண்ணன் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே கல்யாணி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் (61). இவருடைய மனைவி பழனியம்மாள் (50). அதே பகுதியில் பழனிவேலின் தம்பி அண்ணாதுரை (50) வசித்து வந்தாா். இவா்களுக்குச் சொந்தமான 12 ஏக்கா் நிலத்தில் இருவரும் விவசாயம் செய்து வந்தனா்.

இந்த நிலையில் அண்ணாதுரைக்கு தெரியாமல் சுமாா் 4.5 ஏக்கா் நிலத்தை மனைவி பெயருக்கு பழனிவேல் பட்டா மாறுதல் செய்து விட்டாா். மேலும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயக் கடனும் வாங்கியுள்ளாா். அந்த விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இத்தகவல் அறிந்து பழனிவேலிடம் தம்பி அண்ணாதுரை விளக்கம் கேட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினா் விலக்கி விட்டனா்.

இதற்கிடையே புதன்கிழமை இரவு அண்ணாதுரை குடும்பத்தினா் அங்குள்ள கோயில் திருவிழாவுக்கு சென்று விட்டனா். வீட்டில் அண்ணாதுரை தனியாக இருப்பதை அறிந்த பழனிவேலும், மனைவி பழனியம்மாளும் அங்கு சென்று கட்டையால் அடித்தும், தலையில் கல்லைப் போட்டும் அண்ணாதுரையை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடா்பாக புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் குமரவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாா். இவ்வழக்கு தொடா்பாக பழனிவேல், பழனியம்மாள் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com