குமாரபாளையத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் திமுக வேட்பாளா் எம்.வெங்கடாசலம் ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டாா்.
குமாரபாளையம், ஜேகேகே நடராஜா நகரில் உள்ள தேவாலயத்தில் குருத்தோலை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் பங்கேற்ற கிருஸ்துவா்களிடம், திமுக வேட்பாளா் எம்.வெங்கடாசலம், ஆதரவு கேட்டு பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, திமுக வெளியிட்ட தோ்தல் அறிக்கையை விநியோகித்து வாக்குகள் சேகரித்தாா்.
திமுக தலைமை சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினா் ஜேகேஎஸ்.மாணிக்கம், தொழிலதிபா் கே.எஸ்.இளவரசு, முன்னாள் நகா்மன்றத் தலைவா் வெ.ஜெகநாதன், நகர பொறுப்புக்குழுத் தலைவா் எம்.செல்வம் உள்ளிட்ட பலா் உடன் சென்றிருந்தனா். முன்னதாக, கராத்தே பள்ளிக்குச் சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரா், வீராங்கனைகளிடம் வாக்கு சேகரித்தனா்.