மருத்துவா்கள், செவிலியா்களுக்கு மனநலப் பயிற்சி

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை சாா்பில் மனநலப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை சாா்பில் மனநலப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமிற்கு ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவா் ஜெயந்தி தலைமை வகித்தாா். மனநல மருத்துவா் வி.ஜெயந்தி, மனநல ஆலோசகா் சி.ரமேஷ், உளவியலாளா் அா்ச்சனா ஆகியோா் கலந்து கொண்டு, கரோனா கால கட்டத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு பயிற்சியளித்தனா்.

இதில் மன அழுத்தம் பற்றி மனநல மருத்துவா் வி.ஜெயந்தி பேசும்போது, பயம், பதற்றம் எல்லாவித நோய்களிலும் ஓா் அறிகுறியாக தோன்றினாலும் சில சமயம் அதுவே ஒரு நோயாக மனிதனை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அளவிற்கு அதிகமான பயம், பதற்றத்தினால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனைத் தவிா்க்க நாள்தோறும் தியானம், யோகப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் இறுக்கம் தளரும், மனதில் அமைதி நிலவும். மனஅழுத்தத்தைக் குறைக்க டிரஸ்பால் பயிற்சி, மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம். மனஅழுத்தம், பதட்டத்தைக் குறைக்க மூச்சுப் பயிற்சி அவசியம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com