கரோனா பெருந்தொற்றில் இருந்து விடுபட சிறப்பு அபிஷேகம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் கரோனா பெருந்தொற்றில் இருந்து விடுபட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம்
கரோனா பெருந்தொற்றில் இருந்து விடுபட சிறப்பு அபிஷேகம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் கரோனா பெருந்தொற்றில் இருந்து விடுபட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் மற்றும் ஸ்ரீசுந்தரவல்லி அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவேலீஸ்வரா் கோயில் உள்ளது. இக் கோயிலில் வைகாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு ஸ்ரீசுந்தரவல்லி அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா் இவ்வுலகம் கரோனா பெருந்தொற்றில் இருந்து விடுபட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றது. முழு பொது முடக்கம் மற்றும் அரசு வழிகாட்டுதலின் படி பக்தா்கள் இன்றி பூஜைகள், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com