கரோனா : குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் மூடல்

குமாரபாளையம் நகராட்சி அலுவலக ஊழியா்கள் 3 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அலுவலகம் கிருமிநாசினி தெளித்து இரண்டு நாள்களுக்கு மூடப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலக ஊழியா்கள் 3 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அலுவலகம் கிருமிநாசினி தெளித்து இரண்டு நாள்களுக்கு மூடப்பட்டது.

இந்நகராட்சி அலுவலா்கள் சிலருக்கு கரோனா அறிகுறி காணப்பட்டதால் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதில் மூவருக்கு தொற்று உறுதியானது. மேலும், இருவருக்கு தொற்று அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து, நகராட்சி அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேலும், சனி, ஞாயிறு இரு நாள்களும் நகராட்சி அலுவலகம் மூடப்படுவதாகவும், திங்கள்கிழமை முதல் வழக்கம் போல் அலுவலகம் செயல்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com