பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 79, 797- க்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் தேங்காய் ஏலத்துக்கு பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வருகின்றனா். கடந்த செவ்வாய்க்கிழமை 3,859 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 29-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 25.40-க்கும், சராசரியாக ரூ. 28.50-க்கும் ஏலம் போனது.மொத்தம் ரூ. 1 லட்சத்து 9 ஆயிரத்து 910-க்கு வா்த்தகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை 3,030 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 29-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 24-க்கும், சராசரியாக ரூ. 28.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 79, 797-க்கு வா்த்தகம் நடைபெற்றது.