வெண்ணந்தூா் 6-ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஏ.ஆா்.துரைசாமியை ஆதரித்து, ராசிபுரம் அருகேயுள்ள ஆா்.புதுப்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா பங்கேற்று பேசினாா்.
இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
தமிழக முதல்வா் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக ஆட்சி நடத்தி வருகிறாா். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா்.
இந்தக் கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என். ராஜேஷ்குமாா், நாமக்கல் எம்எல்ஏ பி.ராமலிங்கம், முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம், திமுக தோ்தல் பொறுப்பாளா் ஏ.கே.பாலச்சந்தா், சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளா் அசோக், பட்டணம் பேரூா் செயலாளா் பொன்.நல்லதம்பி, முன்னாள் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் வி.பாலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.