பரமத்தி வேலூரில் 2 மாணவிகளுக்கு கரோனா:
பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் இரண்டு மாணவியக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக மாணவியா் பள்ளிக்குச் சென்ற நிலையில், மற்ற மாணவியா்களுக்கும் ஆசிரியைகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.