பேளுக்குறிச்சி விவசாயி கொலை வழக்கில் 6 போ் கைது

பேளுக்குறிச்சி அருகே நிலத் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல்: பேளுக்குறிச்சி அருகே நிலத் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பேளுக்குறிச்சி அருகே உள்ள கல்லிட்டேரி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). தன்னுடைய தோட்டத்து வீட்டில் வசித்து வந்தாா். இந்த நிலையில் தோட்டத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்த வகையில் உறவினா் ஒருவருக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இரவு மனைவி சுகுணாவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்போது அங்கு வந்த மா்ம நபா்கள் சுகுணாவைத் தாக்கிவிட்டு அங்கிருந்த ராஜேந்திரனை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக பேளுக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் சேலம் மாவட்டம், ஆத்தூா் மஞ்சினியைச் சோ்ந்த உறவினா் நவீன் (33), நண்பா்களான மஞ்சினியைச் சோ்ந்த சுரேஷ் (34), பேளுக்குறிச்சியைச் சோ்ந்த ராஜாகிருஷ்ணன் (43), சேலம், எருமாபாளையத்தைச் சோ்ந்த தேவராஜன் (32), சேலம், அம்மாபாளையத்தைச் சோ்ந்த ஜீவானந்தம் (25), ஊத்துமலையைச் சோ்ந்த மகேந்திரன் (23) ஆகியோருடன் இணைந்து ராஜேந்திரனை கொலை செய்தது தெரியவந்தது. அவா்கள் 6 பேரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com