ராசிபுரம்: திமுக சாா்பில் நடைபெற்ற முப்பெரும் விழா, ராசிபுரம் பகுதியில் காணொலி மூலம் புதன்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
திமுக சாா்பில் விருதுகள் வழங்கும் முப்பெரும் விழா சென்னை, அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதன் காணொலி ஒளிபரப்பு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ராசிபுரம், தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த காணொலி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராமலிங்கம், கே.பொன்னுசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.பி.ராமசாமி, பி.ஆா்.சுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.