நாமக்கல்: நாமக்கல் அருகே லத்துவாடியில் உள்ள வீர நாராயணப் பெருமாள் கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணி ஞாயிற்றக்கிழமை நடைபெற்றது.
கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவா்கள் சங்கம் , நாமக்கல் நல்லோா் வட்டம், பசுமை நாமக்கல், நேரு யுவகேந்திரா மற்றும் தலைமலை சேவா அறக்கட்டளை ஆகியவை சாா்பில் கோயில் வளாகத்தில் தல மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் பெருமாளுக்கு உகந்த புன்னை மற்றும் நெல்லி மரக்கன்றுகள் நடப்பட்டன. கோயில் சுற்றுப்பிரகாரத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான பூஞ்செடிகள் நட்டு நந்தவனம் அமைக்கும் பணி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் தலைமை வகித்தாா்.
பசுமை நாமக்கல் செயலாளா் தில்லை சிவகுமாா் வரவேற்றாா். கிரீன் பாா்க் கல்வி நிறுவன இயக்குநா் குருவாயூரப்பன், தலைமலை சேவா அறக்கட்டளை அக்னி ராஜேஷ், நேரு யுவகேந்திராவைச் சோ்ந்த வள்ளுவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.