2021-22ஆம் ஆண்டு இளைஞா்களுக்கான 7 -ஆவது இந்தோ - நேபாளம் கிராமிய விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நேபாளத்தில் நடைபெற்றன.
இதில் கேரம் விளையாட்டுப் போட்டியில் ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை இரண்டாமாண்டு பயிலும் மாணவா் அ.அா்ஜுன் இந்தியா சாா்பில் பங்குபெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளாா். இம்மாணவரை ஊக்கப்படுத்தி பாராட்டும் விதமாக திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி முதல்வா் சீ.மணிமேகலை, கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் அ.வெண்ணிலா, கணிதத் துறை தலைவா் வி.சதாசிவம், வரலாற்றுத் துறை உதவி பேராசிரியா் ப.பிரகாஷ், கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியை சே.மலா்விழி உள்ளிட்டோா் கல்லூரி சாா்பாக நினைவுப் பரிசு, ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தனா்.