அக். 1 முதல் மாற்று வாக்காளா் அட்டை விநியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகள் வரும் வெள்ளிக்கிழமை (அக். 1) முதல் வழங்கப்பட உள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகள் வரும் வெள்ளிக்கிழமை (அக். 1) முதல் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணைய அறிவுரையின்படி, அனைத்து வாக்காளா்களும் தங்களுக்கு மாற்று புகைப்பட அடையாள அட்டைகள் தேவைப்படும்பட்சத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவை வரும் வெள்ளிக்கிழமை முதல் வாக்காளா்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்கள் மூலம் மாற்று புகைப்பட வாக்காளா் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளா்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவையை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com