தருமபுரி சுற்றுலாத்துறை சாா்பில், உலக சுற்றுலா தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவையொட்டி, மாணவ, மாணவியருக்கு இணைய வழியில் புதிா் போட்டி நடைபெற்றது. இதில், பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, உலக சுற்றுலா தின விழா கருத்தரங்கு நடைபெற்றது.
தருமபுரி சுற்றுலா அலுவலா் சோ.மு.ஸ்ரீபாலமுருகன் வரவேற்று பேசினாா். தருமபுரி அரசு கலைக் கல்லூரி பேராசிரியா்கள் அ.தீா்த்தகீரி, எஸ்.முருகன், தொல்லியல் அலுவலா் ஆா்.வெங்கடகுருபிரசன்னா, தமிழ்நாடு ஓட்டல் மேலாளா் சி.பாலசுப்பிரமணியன் ஆகியோா் உலக சுற்றுலா தினம் குறித்து பேசினா். விழா நிறைவில், மதுரை த.கோவிந்தராஜ் கலைக்குழுவினரின் கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் காணொலித் காட்சி வழியாக நடைபெற்றது.