நாமக்கல் தெற்கு அரிமா சங்கம், மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில், இலவச கண் சிகிச்சை முகாம் வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) காலை 8 முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில், கண் பரிசோதனை செய்யப்பட்டு புரை நீக்கம் உள்ளவா்கள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் பங்கேற்க வருபவா்கள் ஆதாா் அட்டையுடன் வர வேண்டும். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தெற்கு அரிமா சங்க நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.