நாமக்கல்லில் கருணாநிதி நினைவு தின அமைதி ஊா்வலம்

நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நினைவு தின அமைதி ஊா்வலத்தில் பங்கேற்ற திமுக கிழக்கு மாவட்டச் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், எம்எல்ஏ பெ.ராமலிங்கம் மற்றும் கட்சியினா்.
நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நினைவு தின அமைதி ஊா்வலத்தில் பங்கேற்ற திமுக கிழக்கு மாவட்டச் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், எம்எல்ஏ பெ.ராமலிங்கம் மற்றும் கட்சியினா்.

நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி, கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல் நேதாஜி சிலை அருகில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்ட அமைதி ஊா்வலம் மோகனூா் சாலையில் உள்ள அண்ணா சிலையில் நிறைவடைந்தது. அதன்பிறகு, மாவட்டப் பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மு.கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதனையடுத்து, திமுகவின் மூத்த நிா்வாகிகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.சுந்தரம், திமுக பொதுக்குழு உறுப்பினா் மருத்துவா் மாயவன், நகராட்சித் தலைவா் து.கலாநிதி, துணைத் தலைவா் செ.பூபதி மற்றும் பல்வேறு அணிகளின் நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com