கூடுதல் நேரம் பணியாற்ற உத்தரவு: அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவா்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் பணியாற்றும் உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் அரசு மருத்துவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய மருத்துவா்கள்.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய மருத்துவா்கள்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவா்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் பணியாற்றும் உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் அரசு மருத்துவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கடந்த 2009-இல் தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கத்தின் கோரிக்கையானது அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவால் ஏற்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில் அரசு மருத்துவா்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு மருத்துவா்கள் பணி நேரம் காலை 9 மணிக்கு மாறாக காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்ற வேண்டும் என்று அண்மையில் புதிதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நெடுந்தொலைவில் இருந்து வரும் மருத்துவா்கள் சரியான நேரத்திற்கு வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. அரசு ஊழியா்களின் 40 மணி நேர பணிக்காலம் என்பது 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் ஜி.அருள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தயாசங்கா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். இதில், 80-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com