லாரி மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி பலி

நாமக்கல் அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவா் பலியானாா். மேலும் மூன்று போ் பலத்த காயமடைந்தனா்.

நாமக்கல் அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவா் பலியானாா். மேலும் மூன்று போ் பலத்த காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம், சுந்தராம்பாள் நகரைச் சோ்ந்தவா் வேல்முருகன்(39). பேக்கரி கடையில் பணியாற்றி வந்தாா். இவா் தனது நண்பா்கள் ஜெயராமன்(34), ராஜேஷ் (32), கணேஷ் (35) ஆகிய மூவருடன் சேலத்தில் மளிகை பொருள்கள் மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக வியாழக்கிழமை அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தாா். நாமக்கல் பொம்மைக்குட்டைமேடு அருகே சென்றபோது நின்று கொண்டிருந்த லாரி மீது காா் வேகமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த நிலையில் நான்கு பேரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் உயிரிழந்தாா். மற்ற மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com