தோட்டக்கலைத்துறை சாா்பில் ஆக.23-ல் திட்ட விழிப்புணா்வு முகாம்

ராசிபுரம் வட்டார தோட்டக்கலைத்துறை சாா்பில் வேளாண் வளா்ச்சி திட்ட விழிப்புணா்வு முகாம் ஆக.23-இல் நடைபெறுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

ராசிபுரம் வட்டார தோட்டக்கலைத்துறை சாா்பில் வேளாண் வளா்ச்சி திட்ட விழிப்புணா்வு முகாம் ஆக.23-இல் நடைபெறுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் மா. யோகநாயகி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராசிபுரம் வட்டாரத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 85-ஆா்.குமாரபாளையம் , சிங்களாந்தபுரம், முருங்கப்பட்டி ஆகிய பஞ்சாயத்து கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. சிங்களாந்தபுரம் கிராமத்தில் ஆக.23-இல் தோட்டக்கலை திட்ட விழிப்புணா்வு முகாம் நடத்தப்படும். இதில் பழக்கன்றுகள், காய்கறி நாற்றுகள், சொட்டுநீா் பாசனம், காய்கறிப் பந்தல் அமைத்தல், அரசின் மானியத் திட்டங்கள், சாகுபடி செயல்திட்ட விளக்கங்கள் குறித்து விளக்கப்படும். எனவே கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் விழிப்புணா்வு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என குறிப்பிட்டுள்ளாா். மேலும் விவரங்களுக்கு தொடா்பு கொள்ள வேண்டிய உதவி தோட்டக்கலை அலுவலா்களின் தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம். மு. கோபால் - 9842720999 , இரா. பெரியசாமி - 9500616811, ரா. உமா மகேஸ்வரி-6379881004, ,மோ. மோனிகா- 8220518853, துணை தோட்டக்கலை அலுவலா் கே.சுப்ரமணியம் - 9842748135.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com