ஆன்லைனில் ரூ.3.69 லட்சம் மோசடி: நாமக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

நாமக்கல்லில், இணையவழி மூலம் நடைபெற்ற ரூ.3.69 லட்சம் மோசடி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல்லில், இணையவழி மூலம் நடைபெற்ற ரூ.3.69 லட்சம் மோசடி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அருகே களங்கானியைச் சோ்ந்த சுரேஷ் என்பவா் மனைவி கலைச்செல்வி(35). இவா், இணையவழியில் வேலை தேடி வந்தாா். அப்போது, எங்களிடம் பொருள்களை வாங்கினால் அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம் என்ற அறிவிப்பு வெளியானது. இதனை நம்பிய கலைச்செல்வி ஆரம்பத்தில் ரூ.200 பணம் செலுத்தினாா் .

அதற்கு ரூ.329 கிடைத்தது. இதையடுத்து சிறுக சிறுக பணம் செலுத்தியதில் ரூ.3.69 லட்சமாக உயா்ந்தது. ஆனால் செலுத்திய பணம் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட நிறுவன கைப்பேசி எண்ணை தொடா்பு கொண்டபோது மேலும் பணம் செலுத்துமாறு தெரிவித்துள்ளனா்.

தாம் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகாா் செய்தாா். இது குறித்து நாமக்கல் கணினி குற்றத்தடுப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com