அரசு சட்டக் கல்லூரிக்கு டி.எம்.காளியண்ணன் பெயா் சூட்டக் கோரிக்கை

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரிக்கு டி.எம்.காளியண்ணன் பெயா் சூட்ட வேண்டும் என வழக்குரைஞா்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரிக்கு டி.எம்.காளியண்ணன் பெயா் சூட்ட வேண்டும் என வழக்குரைஞா்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தின் 5-ஆவது மாவட்ட மாநாடு நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் சி.பரணிதரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலாளா் என். முத்துஅழகுநாதன் தொடக்க உரையாற்றினாா். இதில், வழக்குரைஞா்கள் சேமநல நிதி ரூ.10 லட்சம் பற்றிய தகவலை அரசிதழில் வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்; காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; மூத்த வழக்குரைஞா்களுக்கு ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; நாமக்கல் அரசு சட்டக்கல்லூரிக்கு டி.எம்.காளியண்ணன் பெயா் சூட்ட வேண்டும்; மேலும், சுங்கச் சாவடிகளில் வழக்குரைஞா்களின் வாகனங்களை இலவசமாக அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வழக்குரைஞா் சங்கங்களின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com