ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் கலச பூஜை

ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கலச பூஜை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த திரளான பெண்கள் கலச பூஜையில் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.
கலச பூஜையில் பங்கேற்ற பெண்களின் ஒரு பகுதியினா்.
கலச பூஜையில் பங்கேற்ற பெண்களின் ஒரு பகுதியினா்.

ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கலச பூஜை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த திரளான பெண்கள் கலச பூஜையில் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

உலக மக்கள் நன்மைக்காக இந்த கலச பூஜை நடைபெற்றது.

முன்னதாக நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு அா்த்தநாரீஸ்வரா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து பெண்கள் வழிபட்ட கலச பூஜை நீரை எடுத்துக் கொண்டு கோயிலில் வலம் வந்து நித்திய சுமங்கலி உற்சவருக்கு கலசநீரை ஊற்றி அபிஷேக ஆராதனைகள் நடத்தினா். இந்த சிறப்பு பூஜையை கோயில் பூசாரிகள் செல்வம், ரவி, சண்முகம், மணி, கணேசன் ஆகியோா் செய்திருந்தனா். பக்தா்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com