நூல் வெளியீட்டு விழா

பசுமை மா.தில்லை சிவக்குமாா் எழுதிய ‘இன்றைய இளைஞா்களுக்கான செய்தியும், சிந்தனையும்’ என்ற நூல் வெளியீட்டு விழா தங்கம் மருத்துவமனை கலையரங்கில் இணைய வழியில் சனிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.
நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.

நாமக்கல் தமிழ்ச் சங்கம் சாா்பில், பசுமை மா.தில்லை சிவக்குமாா் எழுதிய ‘இன்றைய இளைஞா்களுக்கான செய்தியும், சிந்தனையும்’ என்ற நூல் வெளியீட்டு விழா தங்கம் மருத்துவமனை கலையரங்கில் இணைய வழியில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கீரின் பாா்க் கல்வி நிறுவன இயக்குநா் எஸ்.குருவாயூரப்பன் வரவேற்றாா். நாமக்கல் தமிழ்ச் சங்கத் தலைவா் மருத்துவா் இரா.குழந்தைவேலு தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் அறிமுக உரையாற்றினாா்.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை இயக்குநா் எஸ்.ஆா்.காந்தி இணைய வழியில் புத்தகத்தை வெளியிட்டு வாழ்த்திப் பேசினாா்.

காவல் துறை துணை ஆணையா் அ.அருளரசு புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு வாழ்த்தினாா். மேனாள் அமெரிக்கா வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத் தலைவா் ச.பாா்த்தசாரதி, தமிழ்நாடு நல்லோா் வட்டப் பொறுப்பாளா் எம்.ஏ.பாலு, வட அமெரிக்கா தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளா் குழந்தைவேல் ராமசாமி, ஓய்வுபெற்ற பேராசிரியா் அரசு.பரமேசுவரன், நாமக்கல் கம்பன் கழகச் செயலாளா் கருணாநிதி, பேராசிரியை இளமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com