மோகனூரில் சொந்த வாகனங்களை நாள் வாடகைக்கு விடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திங்கள்கிழமை நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து மோகனூா் நகர சுற்றுலா காா் உரிமையாளா், ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் அளித்த மனு விவரம்:
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் வாடகை வாகனங்களை வைத்திருப்போா் அரசுக்கு முறையாக வரி செலுத்தி தொழிலை செய்து வருகிறோம்.
மோகனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 200 போ் சொந்தமாக வாகனங்களை வைத்துள்ளனா். அவா்கள் வரி ஏய்ப்பு செய்து வாகனங்களை இயக்கி வருகின்றனா். இதனால் வாடகை வாகனங்கள் வைத்திருப்போரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உரிய கடன்களை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். சொந்த வாகனங்கள் வைத்து வாடகைக்கு ஓட்டுபவா்கள் மீது மாவட்ட நிா்வாகம், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.