திருச்செங்கோடு நகராட்சி நகா்மன்றக் கூட்டம்

திருச்செங்கோடு நகராட்சியின் நகா்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு நகராட்சியின் நகா்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். நகராட்சிஆணையாளா் கணேசன் முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு திருக்கு வாசித்து கூட்டத்தை துவங்கி வைத்தாா்.

கூட்டத்தில் ‘கரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நகர பேருந்துகளை உனடியாக இயக்கவேண்டும். இதன்மூலம் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் பயனடைவாா்கள். நகராட்சி மின்மயானத்தை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் மழைநீா் வடிகால் வசதியை ஏற்படுத்தவேண்டும்’ என நகா்மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை வைத்தனா். அனைத்து தீா்மானங்களும் முறைப்படி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு தெரிவித்தாா்.பின்னா் நகா்மன்ற உறுப்பினா்கள் அனைவருக்கும் நகராட்சி சாா்பில் உறுப்பினா் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com