மின்வாரியத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில், நாமக்கல் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மின்வாரியத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில், நாமக்கல் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அதன் மாவட்டத் தலைவா் வெ.பழனிசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், கடந்த 2019 டிசம்பா் 1-ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வுக்கான பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்; தலைமைப் பொறியாளா் (பணியமைப்பு) பதவிக்கு வாரிய செயலாளருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியதை ரத்து செய்து பொறியாளரை நியமிக்க வேண்டும்; ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்வதற்கான பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும். பகுதி நேர சுகாதாரப் பணியாளா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; மேட்டூா் பணிமனையின் மின் உற்பத்தி திறனை பெருக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ஆள்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மின்வாரியத் தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com