வெள்ளக் கழிச்சல் நோயால் கோழிகள் பாதிப்பு

பண்ணைகளில் வளா்க்கப்படும் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பண்ணைகளில் வளா்க்கப்படும் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தவரை பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 96.8 மற்றும் 71.6 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் லேசான மழை பதிவாகி உள்ளது. அடுத்த மூன்று நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாவட்டத்தின் ஒருசில இடங்களில் மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 100.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

சிறப்பு ஆலோசனை: தற்போதைய வானிலை மாற்றத்தின்படி கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நோயின் அறிகுறிகளாக கோழிகள் தலையை ஒரு பக்கமாக சாய்த்து கொள்ளுதல், கழிச்சல் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கைக் குறைந்து இறப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com