நாமக்கல்லில், உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, மாணவ மாணவிகளுக்கு உணவுப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
திமுக மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை, நாமக்கல் மாவட்டத்தில் வரும் 4-ஆம் தேதி வரை கொண்டாட அவரது கட்சியினா் முடிவு செய்துள்ளனா். அந்த வகையில், நாமக்கல் பெரிய பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 127 மாணவ, மாணவியருக்கு உணவுப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
தெற்கு நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் செயலாளா் ராணா ஆனந்த் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் மணிமாறன், நாமக்கல் நகராட்சித் தலைவா் கலாநிதி, துணைத் தலைவா் பூபதி, வாா்டு உறுப்பினா்கள் சிவக்குமாா், விஜய் ஆனந்த், நந்தகுமாா், லட்சுமி, பரிதி இளம்வழுதி, செல்வகுமாா், தெற்கு நகர இளைஞரணி அமைப்பாளா் சதீஷ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.