மருந்தாளுநா் பணி தோ்வுக்கு இலவச பயிற்சி

மருந்தாளுநா் பணி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நடைபெறுகிறது.

மருந்தாளுநா் பணி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது மருத்துவா் பணியாளா் தோ்வு வாரியத்தால் (எம்ஆா்பி) அறிவிக்கப்பட்டுள்ள 889 காலியிடங்கள் கொண்ட மருந்தாளுநா் (பாா்மசிஸ்ட்) தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்புக்கான முதற்கட்ட அறிமுக வகுப்பு செப். 28 காலை 11 மணியளவில் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மனுதாரா்கள் தங்களது விவரத்தை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ நேரில் தொடா்பு கொண்டு பெயா், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விவரத்தை பதிவுசெய்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com