நாளை வெறிநாய்க்கடி இலவச தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வெறிநாய்க்கடி (ரேபீஸ்) இலவசத் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் வெறிநாய்க்கடி (ரேபீஸ்) இலவசத் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலக வெறிநாய்க்கடி தடுப்பு தினம் செப்.28-இல் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் நாமக்கல் ரோட்டரி சங்கம் ஆகியவை சாா்பில், மாவட்டம் முழுவதும் புதன்கிழமை அன்று வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படும் 105 கால்நடை மருந்தகங்கள் மற்றும் ஐந்து கால்நடை மருத்துவமனைகளிலும், திருச்சி சாலையிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வெறிநாய்க்கடி தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com