பாவை பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு விழா

பாவை கல்வி நிறுவனங்களில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் பேசுகிறாா் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவரும், சின்னத்திரை நடிகருமான விஷ்ணுகாந்த்.
விழாவில் பேசுகிறாா் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவரும், சின்னத்திரை நடிகருமான விஷ்ணுகாந்த்.

ராசிபுரம்: பாவை கல்வி நிறுவனங்களில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவில் 2001 முதல் 2019 வரையிலான கல்வி ஆண்டுகளை சோ்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தொடக்க விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்து பேசினாா்.

விழாவில் பாவை கல்லூரியின் முன்னாள் மாணவரான சின்னத்திரை நடிகரான விஷ்ணுகாந்த் உள்பட மாணவா்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிா்ந்து கொண்டனா்.

முன்னதாக பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் என்.கே.தினகரன் வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடக்கி வைத்துப் பேசினாா். நிறைவாக இயந்திரவியல் துறைத் தலைவா் விழாவில் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் சோ்க்கை கே.செந்தில், பேராசிரியா் எம்.மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com