ராசிபுரம்: பாவை கல்வி நிறுவனங்களில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவில் 2001 முதல் 2019 வரையிலான கல்வி ஆண்டுகளை சோ்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
தொடக்க விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்து பேசினாா்.
விழாவில் பாவை கல்லூரியின் முன்னாள் மாணவரான சின்னத்திரை நடிகரான விஷ்ணுகாந்த் உள்பட மாணவா்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிா்ந்து கொண்டனா்.
முன்னதாக பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் என்.கே.தினகரன் வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடக்கி வைத்துப் பேசினாா். நிறைவாக இயந்திரவியல் துறைத் தலைவா் விழாவில் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் சோ்க்கை கே.செந்தில், பேராசிரியா் எம்.மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.