மழலையா் பட்டமளிப்பு விழா

ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திா் பள்ளிகளின் மழலையா் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
பட்டம் பெற்ற மழலையா்கள்.
பட்டம் பெற்ற மழலையா்கள்.

ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திா் பள்ளிகளின் மழலையா் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் பள்ளியின் தலைவா் என்.மாணிக்கம் தலைமை வகித்தாா். செயலா் வி.சுந்தரராஜன் வரவேற்றுப் பேசினாா். நா்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்சி பள்ளிகளின் ஆண்டறிக்கையை பொறுப்பாசிரியா்கள் ஜி.கவிதா, ஆா்.பூா்ணிமா, எஸ்.சரண்யா சம்பத் ஆகியோா் வாசித்தனா்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் தங்கம் மவுண்ட் லிட்டிராஜி பள்ளியின் இயக்குநா் தீபா திருநாவுக்கரசு கலந்து கொண்டு மழலையா் வகுப்பு முடித்து 1-ஆம் வகுப்பு செல்லும் மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கிப் பேசினாா்.

விழாவில் மாணவ மாணவியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி பொருளாளா் ராமதாஸ், கல்விக்குழு சோ்மன் வி.ராமசாமி, துணைத்தலைவா் ஆா்.பெத்தண்ணன், சிபிஎஸ்சி பள்ளி சோ்மன் டாக்டா் எம்.ராமகிருஷ்ணன், மெட்ரிக் பள்ளி முதல்வா் பி.கிருஷ்ணமூா்த்தி, சிபிஎஸ்சி பள்ளி துணை முதல்வா் வி.காா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com