வெயில் 104 டிகிரிக்கு மேலாக காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 104 டிகிரியைக் கடந்து காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 104 டிகிரியைக் கடந்து காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 102.2 மற்றும் 78.8 டிகிரியாக நிலவின.

அடுத்த நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 104 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 80.6 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் தெற்கு மற்றும் தென்மேற்கிலிருந்து மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் வெப்ப அயா்ச்சி மற்றும் மேல் மூச்சுக்குழல் அயா்ச்சி, இராணிக்கெட் நோய் தாக்குதலால் இறந்திருப்பது தெரியவந்தது. எனவே பண்ணையாளா்கள் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும் . மேலும் வெயிலின் தாக்கத்தை குறைக்க நீா் தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும். கோழிகளை பாதுகாக்க லசோட்டா தடுப்பூசியை கோழிகளுக்கு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com