கல்வித் துறை பணியாளா்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சு பணியாளா்களில், இரு சதவீத பட்டதாரி, முதுகலை ஆசிரியா் மற்றும் தகுதி படைத்தோா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றத

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சு பணியாளா்களில், இரு சதவீத பட்டதாரி, முதுகலை ஆசிரியா் மற்றும் தகுதி படைத்தோா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் ஜெயரத்தினகாந்தி தலைமை வகித்தாா். மாநில பிரசார செயலாளா் சோமசுந்தரம் வரவேற்றாா். கூட்டத்தில், தமிழ்நாடு பள்ளிகல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளா்களில் பி.எட். தகுதி பெற்றவா்களுக்கு 2 சதவீத பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியா்களாக பதவி உயா்வில் செல்வதற்கான அரசாணையை முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறப்பித்தாா்.

2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக இந்த அரசாணையானது அமல்படுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக வழங்க வேண்டிய பின்னடைவு 2 சதவீத பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் 674 மற்றும் முதுகலை ஆசிரியா் பணியிடங்கள் 289 ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநில இணைச் செயலாளா் தங்கதுரை, மாவட்டச் செயலாளா் ஜெயராமன், அலாவுதீன் பாஷா, குப்புராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com