வேளாண் சங்கத்தில் ரூ. 1.80 கோடிக்கு பருத்தி விற்பனை

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ.1.80 கோடிக்கு செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ.1.80 கோடிக்கு செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவுச் சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். அதன்படி, ஜூலை 26-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் 4,900 மூட்டை பருத்தி வரத்து இருந்தது.

இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ.8,699 முதல் ரூ.10,900 வரையிலும், சுரபி ரகம் ரூ.9,300 முதல் ரூ.11,125 வரையிலும், மட்ட ரகம் ரூ.4,416 முதல் ரூ. 8,639 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.80 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. வியாபாரிகள் தரம் பாா்த்து பருத்தியைக் கொள்முதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com