பரமத்தி வேலூரில் உள்ள பால ஐயப்ப சுவாமி கோயிலில் 3-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பரமத்தி வேலூரில் அமைந்துள்ள பால ஐயப்ப சுவாமி, அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ராஜ ராஜேஸ்வரி ஆசிரமத்தில் உள்ள விநாயகா், தா்ம சாஸ்தா மற்றும் கிருஷ்ணன் குருசாமி அதிஷ்டானம் ஆகிய கோயில்களில் 3-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஐயப்ப சுவாமி மற்றும் ராஜ ராஜேஸ்வரி ஆசிரம நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.