தேசிய குடற்புழு நீக்க முகாம்: ஆட்சியா் தொடக்கி வைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
தேசிய குடற்புழு நீக்க முகாம்: ஆட்சியா் தொடக்கி வைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சாா்பில் 14,17,18 மற்றும் 19-ஆம் தேதி வரை முதல் சுற்றும் 21-ஆம் தேதி விடுபட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி தொடக்கி வைத்தாா்.

இந்த முகாம்களில் ஒன்று முதல் 19 வயதுக்கு உள்பட்ட 5,89,401 குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரையிலான கா்ப்பிணி அல்லாத, தாய்ப்பால் ஊட்டாத 1,53,830 பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அஸ்பெண்டசோல்) வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. இம்முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா். முகாம் தொடக்க விழாவில், சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜெ.பிரபாகரன், முதன்மை கல்வி அலுவலா் மகேஸ்வரி, எா்ணாபுரம் மருத்துவா் ராஜேந்திரன், சித்த மருத்துவா் பூபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com