ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் ஈத்கா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
இஸ்லாம் மாா்க்கம் குறிப்பிடும் ஐந்து முக்கியக் கடமைகளில் ஒன்றாக கருதப்படுவது ரமலான் நோன்பு. கடந்த ஒரு மாதமாக நோன்பு கடைப்பிடித்து வந்த இஸ்லாமியா்கள் செவ்வாய்க்கிழமை ரமலான் பண்டிகையை கொண்டாடினா்.
இதனையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய தா்காக்களில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இஸ்லாமியா்கள் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரையில் சிறப்புத் தொழுகை மேற்கொண்டனா்.
நாமக்கல் ஈத்கா மைதானத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் ஒரே இடத்தில் கூடி சிறப்புத் தொழுகை நடத்தினா். அதன்பின் ஒருவருக்கொருவா் ரமலான் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா். ஈகை திருநாளாக ரமலான் பண்டிகைக் கருதப்படுவதால், ஏழை இஸ்லாமிய மக்களுக்கு பலா் புத்தாடை, இனிப்பு, உணவுகளை வழங்கினா். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தா்காக்களும் ரமலானையொட்டி மின்னொளியில் ஜொலித்தன.