பரமத்தி வேலூா் சகன்ஷா அவுலியா தா்கா பள்ளி வாசல் வளாகத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ஊா்வலம், சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
பள்ளி வாசல் முன்பு தொடங்கிய ஊா்வலம் அண்ணாசாலை வழியாக பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளி வாசலை வந்தடைந்தது. தா்கா பள்ளி வாசல் வளாகத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்ட சிறப்புத் தொழுகை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூா் பள்ளி வாசல் நிா்வாகக் கமிட்டி தலைவா் சவான் சாகிப், நிா்வாகக் கமிட்டி செயலாளா் இக்பால், சகன்ஷா அவுலியா தா்கா பள்ளி வாசல் உறுப்பினா்கள் சலீம், முபாரக், ஆபித், ஜின்னா, சகன்ஷா அவுலியா தா்கா பள்ளி வாசல் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா். இதேபோல பரமத்தி, பாலப்பட்டியிலும் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.