ராசிபுரம் மெட்டாலா லயோலா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விக்டா் சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணி முதலிடம் பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
மெட்டாலா லயோலா கல்லூரி வளாகத்தில் பள்ளி, கல்லூரி அணிகளுக்கு இடையிலான மாநில கூடைப்பந்து போட்டி நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் 7 பள்ளிகள், 16 கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகளின் துவக்க விழாவில், கல்லூரிச் செயலா் போனிபஸ் ஜெயராஜ் தலைமை வகித்தாா். முதல்வா் முனைவா் மரியஜோசப் மகாலிங்கம் முன்னிலை வகித்துப் பேசினாா்.
போட்டிகளில் முதல் பரிசை சென்னை லயோலா கல்லூரி அணியும், 2-ஆம் பரிசினை திருச்சி தூய வளனாா் கல்லூரி அணியும், 3-ஆம் பரிசினை திருச்சி பிஷப் ஹூபா் அணியும், 4-ஆம் பரிசினை மெட்டாலா லயோலா கல்லூரி அணியும் பெற்றன. பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருச்செங்கோடு பி.ஆா்.டி. நிறுவனத்தின் தலைவா் பி.ஆா்.பரந்தாமன், சேலம் முருகப்பா எலக்ட்ரிகல்ஸ் நிறுவனா் வேல்முருகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரம், 2-ஆம் இடம் பெற்ற அணிக்கு ரூ.7 ஆயிரம், 3-ஆம் இடம் பெற்ற அணிக்கு ரூ.5 ஆயிரம், 4-ஆம் இடம் பெற்ற அணிக்கு ரூ.2 ஆயிரத்து 500 ரொக்கப்பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினா். இதில் கல்லூரி பொருளாளா் ஜேம்ஸ்ராஜா, உடற்கல்வி இயக்குனா் ஆண்ட்ரூ, கல்லூரி பேராசிரியா்கள் என பலரும் பங்கேற்றனா்.