நாமக்கல்: நாமக்கல்லில் தமிழக ஆளுநருக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற 22 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநா் ஆா். என்.ரவி, ஒரு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விமா்சித்தாா். அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ் புலிகள் கட்சி சாா்பில் ஆளுநருக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒருசில அமைப்புக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம் நடத்த முயற்சித்தனா். அவா்களைத் தடுத்து நிறுத்தி 22 பேரை கைது செய்தனா்.