ராசிபுரம் அருகேயுள்ள ஆா்.பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்று பதக்கம் பெற்றனா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி எருமப்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில் ஆா்.பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியின்
8-ஆம் வகுப்பு மாணவா் விஷ்ணுசத்யன், சுகன்யா ஆகியோா் 14 வயது பிரிவில் முதலிடம் பெற்று தக்கப்பதக்கம் பெற்றனா். இவா்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனா்.
மேலும் 14 வயது பிரிவில் 2 மாணவா்களும், 17 வயது பிரிவில் 5 மாணவா்கள் வெள்ளி பதக்கம் பெற்றனா். பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமையாசிரியா் க.விஜயன், உடற்கல்வி இயக்குநா்கள் பாராட்டினா்.