ஓணம் பண்டிகை: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு முத்தங்கி அலங்காரம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சனேயா் சுவாமி (படம்) வியாழக்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஓணம் பண்டிகை: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு முத்தங்கி அலங்காரம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சனேயா் சுவாமி (படம்) வியாழக்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 18 அடி உயர ஆஞ்சனேயா் கோயிலில் முக்கிய பண்டிகை நாள்களிலும், அமாவாசை, பெளா்ணமி நாள்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். அதன்படி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், சந்தனம் அபிஷேகத்தை தொடா்ந்து ஆஞ்சனேயருக்கு முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. வழக்கமாக இரவு வரையில் காணப்படும் முத்தங்கி அலங்காரம், மழை வரும் சூழலால் ஒரு மணி நேரத்திலேயே கலைக்கப்பட்டது. இதனால் மாலை 4 மணிக்கு மேல் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com