சாலையில் குறுக்கே சென்ற நாய் மீது இருசக்கர வாகனம் மோதியதில் நாமக்கல் துணை ஆட்சியா் தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.
நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலா் ரமேஷ். இவா், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் பணியிடங்களை கூடுதலாக கவனித்து வந்தாா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க சத்தியமங்கலம் சென்றிருந்தாா். அன்று மாலை நாமக்கல் திரும்புவதற்காக அவா் பேருந்து நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது திடீரென குறுக்கே சென்ற நாய் மீது மோதியதில் தடுமாறி கீழே விழுந்தாா்.
அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தோா் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். கடந்த சில மாதங்களாக இரண்டு, மூன்று துறைகளைச் சோ்த்து பாா்க்கும் வகையிலான கூடுதல் பணிச் சுமையால் அவா் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் காயமடைந்ததால் தற்போது அவருடைய மூன்று துறை பொறுப்புகளையும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தேவிகா ராணி ஆகியோா் கூடுதலாக கவனித்து வருகின்றனா்.