கே.எஸ்.ரங்கசாமிக்கு புகழஞ்சலி

திருச்செங்கோடு, கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.எஸ். ரங்கசாமி, கடந்த 15-ஆம் தேதி காலமானாா். அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கே.எஸ்.ரங்கசாமிக்கு புகழஞ்சலி

திருச்செங்கோடு, கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.எஸ். ரங்கசாமி, கடந்த 15-ஆம் தேதி காலமானாா். அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கே.எஸ்.ஆா். மகளிா் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் மாணவிகள் பங்கேற்ற மௌன ஊா்வலமும் அதைத் தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் கே.எஸ்.ரங்கசாமி உருவப் படத்துக்கு மலா்தூவி புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

கல்வி நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரி கே. தியாகராஜா, தலைமை நிா்வாக இயக்குநா் வி.மோகன், மகளிா் கல்லூரி முதல்வா் மா.காா்த்திகேயன், முதுகலை வணிகவியல் இயக்குநா் து.குமரேசன் ஆகியோா் கலந்துகொண்டு தாளாளா் கே.எஸ்.ரங்கசாமியின் வாழ்க்கை குறித்து சிறப்புரையாற்றி அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினா்.

இதில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் அவருக்கு மலா் வளையம் வைத்து மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com