நாமக்கல்லில் பிப். 5-இல் அரசு மதுக் கடைகளை மூட உத்தரவு

வடலூா் இராமலிங்கா் நினைவு தினத்தையொட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) அரசு மதுபானக் கடைகளை மூட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டுள்ளாா்.

வடலூா் இராமலிங்கா் நினைவு தினத்தையொட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) அரசு மதுபானக் கடைகளை மூட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் வடலூா் இராமலிங்கா் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கண்ட நாளில் விதிகளை மீறி மதுக்கடைகளை, உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com